பின்னர் இரண்டாம் கால வேள்வி யாக பூஜை செய்யப்பட்டு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் மேளதாளா வாத்தியங்கள் முழங்க, கருட பகவான் வானில் வட்டமிட்ட நிலையில், "ஓம் சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி" என்று பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த திருவிழாவை காண திண்டுக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.