திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சார வசதி, குடிநீர் வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.