திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கார்த்திக், புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வத்தலகுண்டு பைபாஸ், அஞ்சலி பைபாஸ் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி, நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.