கன்னிவாடி: நாயோடை நீர்த்தேக்கம் வாய்க்காலில் பள்ளங்கள்

கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம் வாய்க்காலில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் குட்டை போல் தேங்கும் நிலையில் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. கன்னிவாடி பேரூராட்சி, கசவனம்பட்டி, கோனுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு இப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த பரப்பில் 40 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகள் ஆக்கிரமிப்பு விவசாயத்தில் சிக்கி உள்ளன. எல்லைக்கான சில குறியீட்டு கற்களும் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.

நீர்பிடிப்பு பகுதியில் சில நாட்களாக மழை பெய்வதையடுத்து நீர்தேக்கத்திற்கான வாய்க்காலில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் வழித்தடத்தில் பரவலாக பெரிய பள்ளங்கள் மட்டுமே உள்ள சூழலில் அவற்றில் குட்டை போல் தண்ணீர் தேங்குவதால் தண்ணீர் நீர்த்தேக்கத்தை வந்தடையாத நிலை உள்ளது. இதை பாராமரிக்கும் பொதுப்பணித்துறையோ எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது. மாவட்ட நிர்வாகம் தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி