அதிலும் இரவு நேரங்களில் பாம்புக் கடி, வண்டுக் கடி, நாய்க் கடிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. இதனால், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் திண்டுக்கல்- குமுளி நான்கு வழிசாலையில் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு காயமடைவோர் இங்கு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியவில்லை. அத்துடன் இங்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை எந்த நேரத்தில் உள்கொள்ள வேண்டும் என்றும் எழுதிக் கொடுக்கப்படுவதில்லை. மொத்தமாக கொடுப்பதால், நோயாளிகள் அவற்றை எப்படி உள்கொள்வது என்பது தெரியாமல் தவிக்க நேரிடுகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி