பட்டிவீரன்பட்டி அருகே பைக் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வத்தலகுண்டு சாலை முத்தலாபுரம் பிரிவு அருகே நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்தலாபுரம் பகுதியை சேர்ந்த அழகுமலை மற்றும் பூசாரிபட்டியை சேர்ந்த முனியாண்டி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி