கிருஷ்ணகிரி: டூவீலர் மீது வேன் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கங்கப்பிராம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூலி வேலைக்காக டூவீலரில் போச்சம்பள்ளியை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, மாவத்தூர் காளியம்மன் கோயில் அருகில் பின்புறம் வந்த டாட்டா ஏசி வாகனம் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி