கிணற்றில் கூலி தொழிலாளியின் சடலம்

பென்னாகரம் அருகே, கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் கூலித்தொழிலாளி. கூலி வேலைக்கு சென்ற நாகராஜ், நேற்று முன்தினம் (செப்.,30) இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் நாகராஜை தேடி வந்தனர். அப்போது நாகராஜ் அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று அக்டோபர் 01 காலை சடலமாக கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் பென்னாகரம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து நாகராஜன் சடலத்தை மீட்டனர். அங்கு வந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. ஆனாலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி