விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து நாகராஜன் சடலத்தை மீட்டனர். அங்கு வந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. ஆனாலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.