ஒகேனக்கல்: காவிரியில் 2வது நாளாக 50,000 கனஅடியாக நீடிப்பு

சமீப நாட்களாக கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் பொழியும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி நிலவரப்படி தொடர்ந்து 2வது நாளாக 50,000 கனஅடியாக நீர்வரத்து நீடிக்கிறது. 13-வது நாளாக ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி