தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 554 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 5,000 கனஅடியாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 6,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி செல்கிறது.