தர்மபுரி: குட்கா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஏரியூர் கலப்பம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பெரும்பாலை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று புதன்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சரவணன் என்பவரை விசாரித்ததில், அவர் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் அவரிடம் இருந்து குட்காவை கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி