ஒகேனக்கலில் 7000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு. சமீப நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் பொழியும் மழையின் அளவையும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவையும் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் காணப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 12 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7000 கன அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி