தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை வெயில் காரணமாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மே 17 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, கடந்த 3 நாட்களாக 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 700 கனஅடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.