தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவேரி ஆறு சமீப நாட்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியில் பொழியும் மழையின் அளவை பொறுத்தும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவைப் பொறுத்தம் நீர் வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக காணப்பட்டிருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 6500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் ஜூன் 16 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி