அவர் பாலக்கோடு ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் என்பதும், தப்பியோடியவர் கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் போலீஸ் இன்ஃபார்மர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் கொலை முயற்சி, ஆள்மாறாட்டம், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயகணேஷ், தப்பியோடிய சக்தி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இதற்கிடையில் ஜெயகணேசை தாக்கியதாக கிராம மக்கள் 10 பேர் மீதும் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு