முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை 95 திருநங்கைகளுக்கும், குடும்ப அட்டைகள் 100 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சுயதொழில் மானியம் திட்டத்தில் 4 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு இதில் 2 நபர்கள் ஆட்டோ ஓட்டுனராகவும், 2 நபர்கள் துணிக்கடை நடத்தி வருகிறார்கள். இன்றைய தினம் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் குறைதீர்ப்பு முகாமில், திருநங்கை பயனாளிகளில் 6 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், 32 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பென்னாகரம்
தர்மபுரி: மரக்கன்றுகள் நடவு செய்து தேர்தல் விழிப்புணர்வு