தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தினசரி ஏலத்தில், வெளி மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 818 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 817, குறைந்தபட்சமாக ரூ. 504, சராசரியாக ரூ. 696 என விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 5,70,708 லட்சத்திற்கு பட்டுக் கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.