தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பென்னாகரம், பெரும்பாலை ஏரியூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழை மற்றும் சூறைக் காற்றினால் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.