தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று ஜூலை 30 தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள் & உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 81 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 81 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று புதிதாக 46 மனுக்கள் பெறப்பட்டன.