இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா, கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்து பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்றாம் இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் மேற்கு மாவட்ட இணை செயலாளர் வீரமணி, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, விவசாய அணி மணி சுற்றுச்சூழல் அணி செந்தில் குமார், தொண்டரணி சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ், விமல், அதியமான், தர்மபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ், கொள்கை பரப்பு அமைப்பாளர் சந்தோஷ், இணையமைப்பாளர் லோக்நாத் வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் கட்சியினர் மாணவ மாணவிகளின் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.