தர்மபுரி: குடிபோதையில் மேஸ்திரி தற்கொலை காவலர்கள் விசாரணை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளாத்திரம்பட்டி ராமன்னா கோட்டையை சேர்ந்தவர் குமார் கட்டிடம் மேஸ்திரி ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். 

இதனால் இவருக்கும் இவரது மனைவி தீபாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்ற நிலையில் மனமடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி