தர்மபுரியை சேர்ந்த பாபு 11 வயது சிறுமியை 2024 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் காவலர்கள் பாபுவை போக்சோ பிரிவில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை விசாரணையின் முடிவில் பாபு மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.70, 000 அபராதம் விதித்து நீதிபதி அசின் பானு தீர்ப்பளித்தார்.