தர்மபுரி: முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ராமியன் அள்ளியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புனித தீர்த்த குடங்களுடன் கலசத்திற்கு பூஜை செய்து தீர்த்தத்தை பக்தர்கள் தெளித்தனர். பின்பு இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மற்றும் ஒன்றிய கழக செயலாளர் நெப்போலியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, கோவில் முக்கிய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், உன்னிகிருஷ்ணர் ஆகியோர் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி