இந்த நிலையில் நேற்று (ஜூன் 6) இரண்டாம் கால பூஜைகள் மற்றும் கோ பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வீரபத்திர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்து சித்தப்ப சுவாமி, எருக்கம்மாள் மற்றும் சக்கரம்மாள் சாமிக்கு பெரிய பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் விரதம் இருந்து தலை மீது தேங்காய் உடைத்து தங்களது கரகம் எடுத்தல், தலைக்கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை லளிகம் பெரிய வீட்டுக்காரர் முருகேசன், சுரக்கப்பட்டு சித்தன் பூசாரிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.