தர்மபுரி: தர்மபுரியில் கல்வி கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய தொழில் வழிகாட்டுதல் மற்றும் கல்விக் கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி வேங்கானார் வஜ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர் கல்வி பயில இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உட்பட முக்கிய அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி