கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசும்போது, இனிமேல் நான் சொல்வது தான், எந்த ஒரு அதிகாரியும் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், யாரும் இருக்க மாட்டார்கள். மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தாலும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவேன். மீறி கேம் ஆடுவதாக நினைத்தால் அவர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவேன். பீடிஓ அலுவலகத்தில் கூட ஏ முதல் இசட் வரை எதுவும் எனக்குத் தெரியாமல் நடக்கக் கூடாது. அதேபோல ஒன்றிய செயலாளர்களுக்கும் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது.
இதில் குறுக்கு சால் யாரும் ஓட முடியாது. மேலும் தருமபுரி பொறுப்பு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இதற்கு முன்பு எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. இனிமேல் நான் சொல்வது தான் என பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.