தர்மபுரி: மாணவர்களுக்கு சீருடை வழங்கிய ஆட்சியர்

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி எம்பி ஆ.மணி, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரெ.சதீஸ் வழங்கி சிறப்புரையாற்றினார். ஆட்சியர் பேசும்போது, தமிழ்நாடு அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும். 

மாணவர்கள் சிறந்த கல்வி பயில்வதில் ஆசிரியர் பெருமக்களுக்கும் முக்கிய பங்குள்ளது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கல்வியாண்டில் முதல் நாளிலேயே பள்ளிக்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி