மதிகோண்பாளையம், பட்டுநூற்பாளர் பிரகாஷ் முதல் பரிசாக ரூ.1,00,000/- மற்றும் ராஜகோபால்கவுண்டர் தெரு, பட்டுநூற்பாளர் வேதவள்ளி இரண்டாம் பரிசாக ரூ.75,000/- என ரூ.1,75,000/- ரொக்கப்பரிசுக்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பலமுனை பட்டுநூற்பாளர்களில் மாநில அளவில் சிறந்த இடம் பிடித்து ரொக்கப்பரிசுகள் பெற்ற தருமபுரி மாவட்ட 2 பட்டுநூற்பாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று நேரில் சந்தித்து, சான்றிதழ்களைக் காண்பித்து, வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கே.எஸ்.செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தோல்விக்கு பவர்பிளேயும், பந்துவீச்சுமே காரணம் - ஹர்திக் பாண்ட்யா