ரூ. 1. 05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந் தைக்கு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று, 600க்கும் மேற்பட்ட ஆடுகளை விவ சாயிகளும், ஆடு வளர்ப் பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7, 500 முதல், 8, 200 ரூபாய் வரை விற்பனையானது, கடந்த வாரத்தை ஒப்பிடு கையில், ஒவ்வொரு ஆடும், 300 முதல், 500 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதேபோல்நேற்று கூடிய சந்தைக்கு, கலப் பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 230 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 42, 000 முதல், 67, 000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9, 000 முதல், 32, 000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், ஆடுகள், 55 லட்சம் ரூபாய்க்கும், மாடுகள், 50 லட்சம் ரூபாய்க்கும் என, மொத்தம், 1. 05 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி