தர்மபுரி: குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அருண் ஆகியோர், இன்று மார்ச் 19, தர்மபுரி செட்டிக்கரை, சோளக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகள், பலசரக்கு மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். 

இதில் செட்டிகரை பகுதியில், ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, மேலும் குட்காவை பறிமுதல் செய்தனர். பூட்டி சீல் வைத்து கடை உரிமையாளருக்கு 25ஆயிரம் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை செய்த 5 பெட்டிக்கடை, மளிகை கடைகளுக்கு, தலா ஆயிரம் வீதம் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி