தர்மபுரியில் அரிசி ஆலையில் பணிபுரிந்த மாரிமுத்து, கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அதியமான்கோட்டை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.