தர்மபுரி: பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏற்படும் இந்த கடுமையான பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக அதிகாலை நேரங்களில் நடைபெறும் விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் கடும் பனிப்பொழிவால் வாகனங்களை இயக்க முடியாமல் மெதுவாக செல்வதால் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு பயணம் செய்தாலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படும் நிகழ்வு நடைபெற்று வருவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பிப்ரவரி 17 அதிகாலை முதலே பொழியும் பனிப்பொழிவால் வாரத்தின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை வெளியூர் செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் இந்த பனிப்பொழிவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி