இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) மாலை ஓடசல் பட்டி கூட்டுரோடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது தர்மபுரி பகுதியில் இருந்து சந்தேகப்படும் வகையில் வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி இரண்டு யூனிட் கிராவல் மண் (நொரம்பு மண்) கடத்தியது தெரியவந்தது. சோதனையின் போது ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் என்று அழைக்கப்படும் நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் கடத்தூர் காவலர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.