தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 முதல் தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 வரை விற்பனையானது. தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் இன்று 7 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.