தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் பாலச்சந்திரன் நடைபெறும் வாரச்சந்தை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பதாக திங்கட்கிழமை பிற்பகலிலேயே தேங்காய் விற்பனைக்காக சந்தை துவங்கிவிடும். நேற்று நடைபெற்ற தேங்காய் வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் நேற்றைய சந்தையில் தேங்காய் அளவைப் பொறுத்து 11 ரூபாய் முதல் 19 ரூபாய் வரை பல்வேறு ரகங்களுக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. மேலும் நேற்று ஒரே நாளில் 11 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.