அவர்கள் ஏற்கனவே இருக்கும் கொட்டகைகளை அப்புறப்படுத்திய பிறகு, நாங்கள் எடுத்து விடுகிறோம் என கூறினர். நோட்டீஸ் கொடுத்து அவர்களையும் காலி செய்ய கூறினர். இதனை ஏற்காத இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொம்மிடி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர்கள் சென்று சமாதானப்படுத்தினர். அதனை ஏற்காததால், நெடுஞ்சாலை கோட்ட உதவி செயற்பொறியாளர் நரசிம்மன் அளித்த புகாரின் பேரில், இன்று நெடுஞ்செழியன், மணி ஆகிய இருவர் மீதும், பொம்மிடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு