இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, ஓசூர், சேலம், கர்நாடகா, ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
மேலும் அடுத்த வாரம் ஆயுத பூஜையும், அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையும் வரவுள்ள நிலையில் முன் பதிவுகள் இந்த ஆண்டு குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூ. 45 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் விலை 70 ரூபாய் வரை விற்பனையானால் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
குறைந்தது 60 ரூபாய்க்கு விற்பனையானால் தான் இழப்பு இல்லாமல் இருக்கும். போதிய அளவு முன்பதிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.