அப்போது ராஜசேகருக்கும், ஆனந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் பீர்பாட்டிலால் ராஜசேகர் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்தனர். மேலும் மதன், சூர்யா, மற்றொரு சூர்யா ஆகிய 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.