பாலக்கோடு பட்டாணியர் தெருவைச் சேர்ந்த பத்ரிநாதமூர்த்தி - சகானாமைதீ தம்பதியினரின் இரண்டு மாத ஆண் குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சிகிச்சை பெற பொருளாதார வசதி இல்லாததால், தமிழக முதல்வரிடம் உதவி கோரி தம்பதியினர் இன்று வியாழக்கிழமை கண்ணீர் மல்க பேட்டியளித்தனர்.