இந்நிலையில், அயித்தாவின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவரது உறவினர்கள் பாலக்கோடு - காரிமங்கலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, காரிமங்கலம் காவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்