அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காவலர்கள் காரை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதை அடுத்து 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரின் உரிமையாளர் யார் மற்றும் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் யார் என்பது குறித்தும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.