தர்மபுரியில், கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வசித்து வந்த பெண், தனது மூன்று வயது குழந்தையை கள்ளக்காதலன் சிகரெட்டால் சூடு வைத்து சித்தரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு, உடல்நலம் குன்றிய குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று வியாழக்கிழமை இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.