தர்மபுரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.03.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக்கூறி பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி