இதையடுத்து அவருடைய மகன் சிவன், சுப்ரமணியை தேடி சென்றார். அப்போது அங்கிருந்த கிணறு அருகே சுப்ரமணியின் காலணி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவன் பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சுப்ரமணியை தேடினர்.
அப்போது சுப்ரமணி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்