கல்லூரியில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் மாணவிகளிடம் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் வகையில் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாஸ்கர் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆட்டம், பாட்டம், தனித்திறமை, கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.