மேலும், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கும் புகார் அளித்தனர். புகார் குறித்து, அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் லதா நேற்று பெருமாளை கைது செய்து விசாரிக்கிறார். மேலும், பெருமாள் மீது கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவரை அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக, புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெருமாள் அவ்வப்போது மது அருந்திவிட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதில், 3 சிறுமிகள் பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க வரலாம் என்பதால், அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சிறுமிகளின் பெற்றோரிடம் சைல்ட் ஹெல்ப் லைன் சூப்பர்வைசர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.