தர்மபுரி: வேளாண் பட்ஜெட்டை வரவேற்று இனிப்பு வழங்கி திமுகவினர்

தமிழ்நாட்டில் வேளாண்மை துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது வருவாய் இழப்புக்கு பயிர் காப்பீடு திட்டம். 

ஆயிரம் வேளாண் பட்டதாரிகளுக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கும் மூலம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையம். 52 கோடி 45 லட்சத்தில் சிறுதானியங்கள் பயிர்களின் பரப்பு உற்பத்தி திறன்களை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் உருவாக்குதல், தமிழ்நாட்டு கிராமங்களில் ஊராட்சி ஒருங்கிணைந்து வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணுயிர் உரம் விவசாயிகளுக்கு இலவசம். 

வேளாண்மை உற்பத்தியை அதிகரிப்பதற்கும், புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவதற்கும், விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற திட்டங்களை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அதை வரவேற்கும் விதமாக இன்று தர்மபுரி நகரமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையில் பொதுமக்களுக்கும், தர்மபுரி உழவர் சந்தை விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பிரதிநிதி கனகராஜ் வெங்கடேஷ் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி