தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகலில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தேங்காய் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். டிசம்பர் 23 நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா பகுதிகளில் இருந்தும், ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
நேற்று சுமார் 1,25,000 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தேங்காய்கள் அளவைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 16 லட்சத்திற்கும் மேல் தேங்காய்கள் விற்பனையானது. மேலும் கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.