வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 508 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 587 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1095 நியாய விலைக் கடைகளும், 118 நடமாடும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் 01. 06. 2023 முதல் 30. 06. 2024 வரை புதிய மின்னனு குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த 5166 மனுதாரர்களில் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள 1454 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் இன்றையே தினம் வழங்கப்பட்டது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் மூலம் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 100 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 18 இலட்சம் மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகளை இன்று(செப்.5) வழங்கப்பட்டுள்ளது.