கிருஷ்ணகிரி: கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் பலி

கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் (70) பாலக்கோடு அருகே உள்ள போடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தண்ணீரம்மாள், இவர்கள் இரண்டு பேரும் பெல்லம்பள்ளியில் தங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) மாலை தங்கள் கால்நடைகளுக்குப் புல் அறுக்கச் சென்ற போது இரண்டு பேரும் திடீரென்று மாயமாகினர். 

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 26) காலை பெல்லம்பள்ளியில் உள்ள விவசாய கிணற்றில் இருவரது உடல்கள் மிதந்தன. தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இரு உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் இருவரும் புல் அறுக்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி